ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமை சாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு தொழில்நுட்பக் கலைஞர்தான் ஒலிப்பதிவாளர். ஒளியும் ஒலியும் இரண்டறக் கலந்ததுதான் திரைப்படம் என்றாலும் ஒளிப்பதிவாளர்களைத் தெரிகிற அளவுக்கு ஒலிப்பதிவாளர்களை வெளியே தெரிவதில்லை. அவர்கள் இன்னமும் புகழ்மறைவுப் பிரதேசத்தில்தான் இருக்கிறார்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும் முன் கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது. ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்ற பின்தான் […]