கடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக தலைவர் நாசர் சாரிடம் கடந்த நான்காம் தேதியில் ஒரு கடிதம் கொடுத்து அதை ஒரு விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு தரவேண்டும் என்று கூறியிருந்தேன். ஒரு சூழ்நிலையில் பத்திரிக்கைக்கு அந்த கடிதம் கிடைத்து என்னிடம் கேட்ட போது பதில் கூறமுடியாத நிலையில் இருந்தேன். […]