லிங்கா படத்தை வாங்கியவர்களுக்கு 12.5 கோடியை ரஜினி திருப்பிக் கொடுத்தும் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. பணத்தைப் பிரித்துக் கொள்வதில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையில் ஆரம்பித்த சண்டை இன்னும் தீர்ந்தபாடில்லை. உரிய நேரத்தில் பணம் கைக்கு வராததினால் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். அப்படியும் பங்கு பிரிப்பு சுமுகமாக நடக்கவில்லை. ரஜினி கொடுத்த பணத்தை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தானே ஏப்பம்விடத் துடிக்கும் சிலரால் பிரச்சனை முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. இந்தப் பிரச்சனையில் […]