விநாயகப் பெருமானே விசேஷமான கடவுள். அவருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபடுவது இன்னும் விசேஷம்! யமனுடைய மகன் அனலன் என்கிறது புராணம். அவன் அனல் வடிவிலானவன். அபூர்வ வரம் பெற்றிருந்தான். அதாவது, அனல் வடிவமான அவன், யாருக்கும் தெரியாமல் ஒவ்வொருவருடைய உடலிலும் புகுந்து, அவரவரை உருக்கி உருக்குலைப்பதே – அவன் பெற்ற வரம். அதன் காரணமாக எண்ணற்ற மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் உருக்குலைந்து போனார்கள். துயரம் தாங்காத தேவர்கள் ஸ்ரீவிநாயகரை நோக்கித் துதித்து முறையிட்டார்கள். இதனால் […]