‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் பாடல் வெற்றி விழாவில் நன்றியுரை நிகழ்த்திய நடிகை சுஹாசினி மணிரத்னம் வேறொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டார்.
தனது நன்றியுரை பேச்சில், “ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உரிமையுண்டு. ஏன்னா உங்களுக்கு அனுபவம் இருக்கு. தகுதியிருக்கு. அதனால என்ன வேண்ணாலும் விமர்சனம் செய்யலாம்.. செய்யுங்க. ஆனால் இப்போவெல்லாம் சோஷியல் மீடியால எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதையெல்லாம் நீங்க அனுமதிக்கக் கூடாது.. தடுக்கணும்.. நீங்க மட்டும்தான் விமர்சனம் செய்யணும்..” என்றார் சுஹாசினி.