Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜீவன் – சமுத்திரகனி இணையும் ‘அதிபர்’

IMG_0477பென் கன்ஸோர்டியம் ஸ்டுடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B. சரவணன் இணை தயாரிப்பில், T.சிவகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அதிபர்’.இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, ராஜ்கபூர்,சரவணசுப்பையா, பாரதி கண்ணன், சங்கிலிமுருகன், பாவா லட்சுமணன், மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம்,மோகனராம், க.தா.கா.திருமாவளவன், ரேணுகா, கோவை சரளா, அழகு, கவிதா பூஜாரி, கோவை செந்தில், மாயி சுந்தர், தெனாலி, சுருளி, ஸ்டில்குமார், ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை –  விக்ரம் செல்வா

பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா

ஒளிப்பதிவு – Philip விஜயகுமார்

கலை – M.G.சேகர்

நடனம் –  சிவசங்கர், தினேஷ்

ஸ்டன்ட் –  கனல் கண்ணன்

எடிட்டிங் – சஷிகுமார்

தயாரிப்பு நிர்வாகம்  –  அஷ்ரப்,  ஹக்கீம்

இணைதயாரிப்பு   –  P.B. சரவணன்

தயாரிப்பு   –    T.சிவகுமார்

இப்படத்தை  “மாயி, திவான், மாணிக்கம்” போன்ற படங்களை இயக்கிய சூரியபிரகாஷ் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டுவாழும் ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் ஜீவன். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டுவாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஈஸ்வரன்’ கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான்படத்தின் கதை.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக்,லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது,” என்கிறார் சூரியபிரகாஷ்.

Back To Top
CLOSE
CLOSE