Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள்

unnamedஅமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் கல்வி, கலாச்சாரம், இயற்கைவளம், சமூக மேம்பாடு மற்றும் எழுத்துப் பணியில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு பாடலாசிரியர் பிரியன், பாடலாசிரியர் அண்ணாமலை, வனத்துறை அதிகாரி கொளஞ்சியப்பா, எழுத்தாளர் சிவன் ஆகியோர் டாக்டர் பட்டம் பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

பாடலாசிரியர் பிரியன் அவர்களுக்கு உலக அளவில் முதல்முறையாக பாடல் எழுதக் கற்றுத் தரும், பாடலாசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தமிழ்த் திரைப்பாக்கூடம் எனும் கல்வி நிறுவனம், அதற்கான பாடத்திட்டம் மற்றும் பாடல் ஆய்வு நூல்களை படைத்தமைக்காக இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

பாடலாசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு இருபதாண்டு கால பத்திரிக்கைப் பணி மற்றும் சிற்றிதழ்கள் குறித்த ஆய்வுக்காக இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

வனத்துறை அதிகாரி கொளஞ்சியப்பா அவர்களுக்கு முப்பதாண்டு கால இயற்கைவள மேம்பாடு மற்றும் வனப்பாதுகாப்பிற்காக சமூகமேம்பாட்டிற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் சிவன் அவர்களுக்கு நூற்றைம்பதிற்க்கும் மேலான நூல்கள் படைத்தமைக்காக சமூகமேம்பாட்டிற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வு சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் 23.05.2015 அன்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது. பிரதம பேராயர் எஸ்.எம்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையேற்று பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார். கலைமாமணி செவாலியர் டாக்டர்.வி.ஜி.சந்தோசம் மற்றும் மாண்புமிகு நீதியரசர் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தலைவர் திரு.பி.கே.இளமாறன் வாழ்த்துரை வழங்கினார்.

பாடலாசிரியர் பிரியன் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் சார்பாக நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வு முடிவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Back To Top
CLOSE
CLOSE