Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய 2 தமிழ்த் திரைப்படங்கள்..!

unnamedஇந்தியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், புதிதாக இரண்டு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கிறது.

இம்முறை ஆர்.வி.பிலிம்ஸுடன் இணைந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், ‘பிறை தேடிய நாட்கள்’ மற்றும் ‘எங்கிட்ட மோதாதே’ என்ற இரண்டு புதிய தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறது.

2013-ம் ஆண்டு இறுதியில் வெளியாகி பெரும் பாராட்டினைப் பெற்ற ‘விடியும் முன்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி அதில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஆபிரஹாம் பிரபு, ‘பிறை தேடிய நாட்கள்’ திரைப்படத்தினை இயக்குகிறார். காதல் கதையான இப்படத்தில் ‘தெகிடி’ படத்தில் ஹீரோவாக நடித்த அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இன்னொரு பக்கம் அதிரடி மற்றும் ஜனரஞ்சக டைப்பில் உருவாகி வரும் ‘எங்கிட்ட மோதாதே’ படத்தினை ராமு செல்லப்பா என்கிற புதிய இயக்குநர் இயக்கி வருகிறார். இவர் ‘பசங்க’, ‘மயக்கம் என்ன’. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்தப் படத்தில் ‘நட்டி’ நட்ராஜ், ராதாரவி, சஞ்சிதா ஷெட்டி, ராஜாஜி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 22-ம் தேதியன்று அனகாபுத்தூர் ‘வெல்கோ’ திரையரங்கில் துவங்கியது.

புதிய திரைப்பட தயாரிப்புகள் பற்றி பேசிய ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத் தலைவரான சாகர் சத்வானி, “இத்திரைப்படங்கள் சிறந்த கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு, சரியான வியாபார முறைகளில் திட்டமிட்டு கொண்டு வரப்பட இருக்கின்றன. தென்னிந்தியாவில் எங்களது வியாபார சந்தையை இன்னமும் அதிகமாக விரிவுபடுத்தும் நோக்கத்தில் சிறந்த திரைப்படங்களை மற்றும் திறமையான திரைக்கலைஞர்களை உருவாக்கவும் எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE