அஞ்சுக்கு ஒண்ணு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (19.07.2015) மாலை 6 மணி அளவில் திருச்சியில் உள்ள சங்கம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது . இதில் திரைப்பட நடிகர்கள் நாசர் , விஷால் , பொன்வண்ணன் ,கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். நடிகர்கள் நாசர் , விஷால் , பொன்வண்ணன் ,கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் இசை தகடை வெளியிட அதனை அஞ்சுக்கு ஒண்ணு பட குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் பேசிய கருணாஸ் அவர்கள் இந்த விழாவை நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று முதலாவதாக கலந்து கொண்ட விழாவாகவே கருதுகிறேன் .
நாங்கள் நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்றதும் சின்ன பட்ஜெட் படங்களை ஊக்குவிப்போம் , அதே போல் சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்தது 100 – 150 திரையரங்குகள் கிடைக்க வழி செய்வோம் என்று உறுதி அளித்தார் .
அதனை தொடர்ந்து பேசிய விஷால் அவர்கள் இது போன்று சிறிய பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவர வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளிவந்த பின்பு தான் அது சிறிய படமா பெரிய படமா என்று தீர்மானிக்கும். அதே போல் புதுமுக நடிகர்கள் பொறுமையும் நேர்மையும் கடைப்பிடித்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறலாம். அவ்வாறு தான் நானும் வெற்றிப்பெற்றேன் என்று நடிகர் விஷால் கூறினார் .
விழாவில் தயாரிப்பாளர் எவர்கிரீன் S சண்முகம் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று பேசினார் . இயக்குநர் ஆர்வீயார் நன்றியுரை வழங்கினார் .
இசையமைப்பாளர் சாஹித்யா அவர்களுக்கு நடிகர் விஷால் அவர்கள் பொன்னாடை போற்றினார்.
இவ்விழாவில் படத்தின் நடிகர்கள் , நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்