ஆகஸ்ட் 7 அன்று இகோர் இயக்கத்தில் திரைக்கு வரவிற்கும் வந்தா மல திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அறிமுகமான பராசக்தி படத்தின் மிக முக்கியமான பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டு இடம் பெறுகிறது.
இப்படத்தை 1952ஆம் ஆண்டு ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது. “தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி”- என தொடங்கும் இப்பாடல் உடுமலை நாராயண கவியால் எழுதப்பட்டு தமிழகத்தின் பட்டி
தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய பாடலாகும். கலைஞர் கருணாநிதி வசனகர்த்தாவாக அறிமுகமாகி புதிய வரலாறு படைத்த பராசக்தியின் பாடலை எங்கள் திரைப்படத்தில் பயன்படுத்த முடிந்ததில் “வந்தா மல” படக்குழு பெருமிதம் கொள்கிறது.
இப்பாடலை எங்களுக்கு கொடுத்து உதவிய சரிகம ஆடியோ நிறுவனத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
“வந்தா மல ” படக்குழுவினர்.