வரும் ஆகஸ்ட் 02 ஆம் தேதி ஞாயிறு மாலை 6.00 மணி அளவில்வடபழனி, என் எஸ்.கே.சாலையில் அமைந்துள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் திரைப்பட இசை கலைஞர்கள் சார்பாக மறைந்த இசை மேதை மெல்லிசை மன்னர் திரு,எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவாஞ்சலி கூட்டம் நடத்துவதாக எங்களது திரைப்பட இசை கலைஞர்கள் மற்றும் அறக்கட்டளை சார்பாக முடிவு எடுக்கப்பட்டது. எங்களது இந்த உணர்வு மிகு நிகழ்ச்சியில் இசை ஞானி திரு.இளையராஜா அவர்கள் முன்னிலை வகித்து மெல்லிசை மன்னர் திரு,எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திரு உருவ படத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறார்கள் , மற்றும் எங்களின் அமைப்பை சேர்ந்த அனைத்து இசை அமைப்பாளர்களும்,பிரபல பாடக, பாடகியரும், இசை கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் , தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
மறைந்த மெல்லிசை மன்னர்.திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இந்த நினைவாஞ்சலி நிகழ்ச்சியை திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் .இசையமைப்பாளர் திரு.எஸ்.எ. ராஜ்குமார், பொது செயலாளர்.திரு.எ.டோமினிக் சேவியர்,பொருளாளர் .திரு.வீ.சேகர் மற்றும் அறக்கட்டளை சேர்மன்.திரு.பீ.ஜி .வெங்கடேஷ் , அறக்கட்டளை செயலர் திரு.வீ.சங்கரன் ஆகியோர் முன்னின்று நடத்துகிறார்கள்.
