வான்சன் மூவிஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் சேதுபதி. பண்ணையாரும், பத்மினியும் என்கிற படத்தை எழுதிய இயக்கிய எஸ்.யூ.அருண்குமார்தான் இந்தப் படத்தையும் எழுதி, இயக்கவுள்ளார். இது இவருக்கு இரண்டாவது படமாகும்.இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசனும் நடிக்கவுள்ளனர். மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் எழுத்தாளர் வேல ராம்மூர்த்தி நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், இசை – கே.நிவாஸ் பிரசன்னா, படத்தொகுப்பு – கர் பிரசாத், கலை இயக்கம் – பாலசந்தர் ஆகிய சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றவுள்ள இப்படத்தை வான்சன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார்.
படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இப்படம் காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்க்க்கூடிய ஒரு ஜனரஞ்சகமான பொழுது போக்குத் திரைப்படமாம். தற்போது படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாத்த்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.