நடிகர் சந்தானம் பேசும் போது.
”இந்த சபரிஷுடன் நான் ஏற்கெனவே ‘மார்க்கண்டேயன்’ படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. இருந்தாலும் அன்புக்காக வந்திருக்கிறேன். ‘மார்க்கண்டேயன்’ படத்தை ஒரு காட்டில் எடுத்தோம். வீரப்பன் கூட நுழையமுடியாத காடு அது. அங்கு டாய்லட் கட்டி மின் சாரம் , ஏசி என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் மாஸ்டர்.
பத்துமாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல்மாடல் அப்பாதான். எங்கள் அப்பா குடிக்க மாட்டார். புகை பிடிக்க மாட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ. சபரிஷுக்கு நல்ல அப்பா, கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்குத் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள் என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டுகிறேன்”. என்றார்.
இயக்குநர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் பேசும்போது. ” தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடிபாயும் என்பது அந்தக்காலம். இப்போது தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 64 அடிபாயும் .பெப்ஸிவிஜயன் வில்லனாகத்தான் நடித்திருக்கிறார் அவரால் டூயட் பாட முடியாது. எனவே தன் மகனை டூயட் பாட வைத்திருக்கிறார். சபரிஷுக்கு யாருடைய சாயலும் இல்லாத முகம். யார் சாயலும் இல்லாத நடிப்பு. நாயகி வித்யாவும் புதியவராக இருக்கிறார். கண்டிப்பாக சபரிஷுடன் இணைந்து படம் செய்வேன்”. என்று கூறி வாழ்த்தினார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பி.எல் தேனப்பன், ராதாகிருஷ்ணன். கதிரேசன், விநியோகஸ்தர் சங்கத்தலைவர் அருள்பதி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். நடிகர்கள் தம்பி ராமையா,ஜான்விஜய், விடிவி கணேஷ், இசையமைப்பாளர் சி.சத்யா, நாயகி வித்யா, ‘மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன், ‘அசுர குலம்’ தயாரிப்பாளர் வேம்பையன் வேலாயுதம், இயக்குநர் விக்னேஷ் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக அனைவரையும் தயாரிப்பாளர் சரவணன் கணேசன் வரவேற்றார்.