உலக நாடுகளில் பல நிகழ்ச்சியின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் A.R . ரகுமானின் நேர்முக இசை நிகழ்ச்சி, நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி சென்னையிலும் , ஜனவரி 23ஆம் தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில் நடை பெற உள்ளது என Noice அண்ட் Grains எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தினர் அறிவித்து உள்ளனர்.
‘இந்த அறிவிப்பு வந்த சில நொடிகளில் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ள எதிர்ப்பார்ப்பு , நிகழ்ச்சியின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது.இந்தத் தருணத்தில் எங்களது நிறுவனத்துக்கு ஆதரவும் , ஊக்கமும் தரும் ரகுமான் சாருக்கும் ஏ கே ஆர் Events நிறுவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றி ‘என்றுக் கூறினார் ‘Noice and Grain’ நிறுவனத்தினரின் முதன்மை அதிகாரி.