Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மழை வெள்ளம் மக்கள் மனதை பண்படுத்தியிருக்கிறது – இளையராஜா பேச்சு…

Ilayarajaமழை வெள்ளம் ஒரு பக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிர்ந்தாலும் பல்வேறு பக்கமிருந்து வந்த உதவிகள் சென்னை மக்களை துயரிலிருந்து மீட்டெடுத்திருகிறது. இதற்காக களமிறங்கிய பல்வேறு தன்னார்வ தொண்டுநிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்து உதவிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியது:
ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருந்த மனிதத்தன்மை இந்த பெருமழை, வெள்ளத்தால் வெளிப்பட்டுள்ளது. வெள்ளம் வருவதற்கு முன்பே இந்த மனநிலையில் நாம் இருந்திருந்தால் இந்த மழை வந்தே இருக்காது.இயற்கை சீற்றங்கள் எல்லாம் இறைவானால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவை. இயற்கை இறைவனின் வேலையாள். இறைவன்தான் மனிதர்களின் மனதை பண்படுத்தி விட்டு வா என்று மழையை அனுப்பி வைத்திருக்கிறார். இறைவனின் அந்த தண்டனையை இயற்கை நமக்கு கொடுத்து அதன் மூலம் மனிதநேயம் வளர்ந்திருக்கிறது.

எப்போதுமே உணர்வுகள்தான் உண்மையானது. நான் அதிகமாக பொது இடங்களில் இருப்பதை தவிர்த்து விடுவேன்.நான் ஏன் இந்தசகதி, வெள்ளத்தில் சென்று மக்களை சந்தித்தேன் என்று தெரியவில்லை. அதற்கு எனக்குள் இருக்கு உணர்வுகள் தான் காரணம்.இந்த மழை கற்றுக் கொடுத்த பாடத்தைக் கொண்டு அடுத்தமழையை நாம் எதிர் கொண்டு விடலாம் என நினைத்து விடவேண்டாம். சுனாமியின் போது எழுந்த பல விஷயங்கள் இந்தமழைக்கு உதவவில்லை.இந்த நொடியில் நடக்கும் எந்த நிகழ்வையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும் என்பதுதான் உண்மை. அடுத்த மழையை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற திறன்மட்டுமே இந்த மழை நமக்கு தந்துள்ளது. மழை,வெள்ளத்தால் நாம் இழந்ததை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது என்றார் இளையராஜா.

Back To Top
CLOSE
CLOSE