பாலிவூட் திரை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள ‘பாஜிராவ் மஸ்தானி’ தென்னகத்தில் , குறிப்பாக சென்னையில் அதே அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங்,பிரியாங்க சோப்ரா, மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படம் ரசிகர்களை மட்டுமின்றி, திரை உலகினர் இடையேயும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிரதிபலிப்பு தான் சென்னையில், சத்யம் திரை வளாகத்தில் நடந்த இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சிக்கு கிடைத்த வரவேற்ப்பு. பல்வேறு நட்சத்திரங்கள் உட்பட திரை உலக பிரமுகர்கள் வந்து இந்த பிரத்தியேக காட்சியை சிறப்பித்தனர்.வந்து இருந்தவர்களை Eros இன்டர்நேஷனல் மீடியா ltd நிறுவனத்தின் , தென்னிந்திய பிரிவு, துணை தலைவர் சாகர் சத்வாணி வரவேற்றார்.
