Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நாலெட்ஜ் டெர்ரரிசம் எனப்படும் அறிவு அழிப்புத் தீவிரவாதம் பற்றி சொல்லும் “ஆகம்”

Aagamஜ்யோ ஸ்டார் என்டர் பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கருக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதி இயக்கி இருக்கும் படம் ஆகம் .

ஆகமம் என்பதன் தமிழ் வடிவமே ஆகம் . ஆகம் என்ற சொல்லுக்கு வந்து சேர்தல் என்று பொருள் என்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். இவர் மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுநர் . தனது சிறப்பான பயிற்சிப் பட்டறைகள் மூலம் பல லட்ச்ம் இளைஞர்களுக்கு தன்னபிக்கைப் பயிற்சி கொடுத்து மனச் சோர்வை நீக்கிய சாதனைக்கு சொந்தக்காரர் .

இவர் எழுதிய ஒரு சிறகு போதும் என்ற தன்னம்பிக்கை நூல் விகடன் பிரசுரத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்று என்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.

தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராசு என் ஐ டி யில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ) எம் டெக் படித்து லண்டனில் வாழும் தொழில் அதிபர் . ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்கள் நடத்துபவர் .

ஆகம் என்ன கதை ?

Aagam Movie Stills (3)”இந்தியாவுக்கு எதிராக எத்தனையோ விதமான தீவிரவாத செயல்பாடுகள் நடக்கின்றன. இதில் பலரும் விழிப்புணர்வு அடையாத திறமைக் குறைபாட்டை உருவாக்குகிற — நாலெட்ஜ் டெர்ரரிசம் எனப்படும் அறிவு அழிப்புத் தீவிரவாதம் பற்றி பேசுகிறேன் ” என்று ஆரம்பிக்கும் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் அது பற்றி கம்பீரமாக சொல்கிறார் .

” இன்று உலகின் மிக முக்கியமான நாடுகளில் முக்கியமான தொழில் நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் எல்லோரும் இந்தியர்கள்தான் .

இந்தியாவில் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களில் படித்த அறிவாளிகளை அயல்நாட்டு நிறுவனங்கள் கொத்திக் கொண்டு செல்கின்றன. பின்னர் அவர்களை வைத்தே மேலும் மேலும் இந்தியாவில் இருந்து அறிவாளிகளைக் கொண்டு செல்கின்றன. அதனால் இந்தியாவின் முன்னேற்றம் தடை படுகிறது . நம்மவர்களால் அந்த அந்நிய தேசங்கள் முன்னேறுகின்றன .

இதுதான் இந்தியாவின் முன்னேற்றத்தைக் கெடுக்கிற– இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய தீவிரவாதம் . இதைதான் நான் படமாக ஆக்கி இருக்கிறேன் .” என்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராமிடம்,

கதை என்ன என்று அவரிடம் கேட்ட போது ….

Aagam Movie Stills (1)” அண்ணன் தம்பிகள் இருவர் . அண்ணன் அந்நிய நாட்டு வாழ்வை விரும்புபவர் . அந்த வாழ்க்கை முறைக்கு ஆசைப்படுபவர் ஆற்றோரம் காலைக் கடன் கழிக்கப் போனாலும் டிஷ்யூ பேப்பரோடு போகும் குணம் உள்ளவர் . தம்பி நேர் மாறானவன் . இந்தியர்களின் உழைப்பு அறிவு திறமை எல்லாம் இந்தியாவுக்கே பயன்படவேண்டும் என்று ஆசைப்படுபவன் . இவர்கள் வாழ்க்கை முறை நமது சமூகத்தோடு இழையும்போது நடக்கும் சம்பவங்களே இந்தக் கதை .

”நாட்டில் நடைபெறும் லஞ்ச லாவண்யம் , ஊழல் , திறமைக்கு மதிப்பின்மை , அரசியல் குறுக்கீடு இவற்றால்தானே பலரும் மனம் வெறுத்து வெளிநாட்டுக்கு போக நினைக்கிறார்கள் . அப்படி இருக்க , இது ஏதோ அந்நிய நாட்டு சதி என்பது போல நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்?” என்று உங்களுக்கு தோன்றலாம் . .

வெகுஜனம் அப்படிதான் நினைத்துக் கொண்டு இருக்கிறது . ஆனால் உண்மை அப்படி இல்லை . நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் இப்போது அது குறைவுதான் . இன்று இந்தியாவில் திறமைக்கும் உழைப்புக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன .. இது பற்றி நான் ஒரு சர்வே எடுத்து அதன் முடிவுகளை வைத்துதான் கதையே அமைத்தேன் .

உண்மையில் டாலர் சம்பள ஆசை காட்டி அந்நிய நிறுவனங்கள் இழுப்பதுதான் நம்மவர்கள் வெளிநாடு போகக் காரணம் . இந்த விசயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது .

Aagam Movie Stills (4)உதாரணமாக ஒருவர் அமெரிக்காவில் நாலாயிரம் டாலர் சம்பளம் வாங்குகிறார் என்றால் அமெரிக்காவை ஒப்பிடும்போது அது ஒன்றும் பெரிய சம்பளமே இல்லை . ஆனால் ஒரு டாலரின் மதிப்பு அறுபது ரூபாய் என்பதால் இந்திய மதிப்பில் அந்த சம்பளம் சுமார் இரண்டரை லட்சம் என்று ஆகிறது . இதை வைத்துதான் நம்மவர்களை அவர்கள் இழுத்து நாலெட்ஜ் டெர்ரரிசம் எனப்படும் அறிவழிப்புத் தீவிரவாதத்தை செய்கின்றனர் ” என்கிறார் .

இதை ஒட்டியே பேசும் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜூ ” அமெரிக்கா ஏர்போர்ட்டில் நான் சந்தித்த ஒரு இந்தியர் எம் பி ஏ படித்தவர் . அவர் அங்கே விமான நிலையத்தின் தரையை துடைக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார் . அவரிடம் பேசியபோது அவர் சொன்னதும் டாலர் மதிப்பால் கிடைக்கும் பணம் பற்றித்தான் . அது மட்டுமல்ல ‘நான் இங்கே இப்படி தரை துடைக்கும் வேலை செய்வது இந்தியாவில் உள்ள என் அம்மாவுக்கு தெரிந்தால் , என் அம்மா செத்தே போய் விடுவார் ‘என்று சொன்னார்

Aagam Movie Stills (2)பல கல்வி நிறுவனங்களில் படித்து முடித்த பின்பு அமெரிக்க போக ஆசை உள்ளவர்கள் கை தூக்குங்கள் என்று சொன்னால் தொண்ணூறு சதவீதம் பேர் உடனே கை தூக்குகிறார்கள் . அவர்களில் பலர் இங்கும் நன்றாக சம்பாதிக்க வாய்ப்பு உள்ளவர்கள்தான் .

இந்த மோகத்தை மாற்றவே இந்தப் படம் எடுத்து இருக்கிறோம் ” என்கிறார் கோட்டீஸ்வர ராஜு.

தொடரும் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ” இப்படி எல்லாம் சீரியசாக இருப்பதால் , இது என்னவோ டாக்குமெண்டரி மாதிரி இருக்கும் என நினைத்து விடாதீர்கள் . காமெடி, காதல் , குத்தாட்டம் , சண்டை கிளாமர் எல்லாம் இருக்கிற பக்காவான கமர்ஷியல் சினிமா ” என்கிறார் .

சக தயாரிப்பாளரான ” முக்கியமாக இது ஒரு பரபரப்பான இன்டரஸ்டிங்கான சோஷியல் திரில்லர் . படம் அவ்வளவு சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருக்கும் . படம் முடியும் போது பார்த்த ஒவ்வொருவர் மனதிலும் நம் அறிவை அந்நியநாட்டுக்கு அடிமைப்படுத்தக் கூடாது என்று தோன்றும் .” என்கிறார் உறுதியான நம்பிக்கையோடு .

Back To Top
CLOSE
CLOSE