Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ராஜபாளையம் மக்கள் மனதில் ராஜாவாக மாறிய நடிகர் விஷால்!!

சமுக நலனில் மிகுந்த அக்கறையுடன் மௌனமாக மக்கள் சேவை நடத்திவருகிறார் நடிகர் விஷால். அவர் நடிக்கும் ”மருது” என்ற திரைபடத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நடந்து வருகிறது. ராஜபாளையம் நகராட்சி பிரதமரின் தூய்மை இந்தியா மற்றும் தமிழக முதல்வர் தொழில் நோக்கு திட்டத்தின் படி, நகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க மத்திய அரசு நகராட்சி உதவியுடன் ராஜபாளையம் ஸ்ரீவல்லிப்புத்தூர் பகுதிகளில் சுகாதார முறையில் செப்டிக் டேங்க் வசதியுடன் விடு தோறும் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. அரசின் மானியம் கிடைத்தாலும் கட்டுமான பணிக்கு அதற்குமேல் செலவாகும் பணத்திற்கு வழியில்லாமல் ஊர் மக்கள் திகைப்பது விஷாலின் கவனத்திற்க்கு சென்றது, அதனை தொடர்ந்து விஷால் தன் சக நடிகர்களான நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர் சூரி ஆகியோருடன் அந்த பகுதியை பார்வையிட்டு பண உதவி தேவைப்படும் பத்து பேரை தேர்ந்தெடுத்து உதவி தொகையான ரூபாய் 80 ஆயிரத்தின் காசோலையை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் சான்றோரிடம் வழங்கினார்.

IFஅதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யா , சூரி மற்றும் படக்குழுவினர்களும் தங்களது பங்கை அளித்தனர் . விஷால் ஊர் மக்களுக்கு தன்வார்வதுடன் உதவி அளிக்க முன்வரவே ஊர் முக்கியஸ்தவர்களும் உதவி அளிக்க முன் வந்து அவர்கள் 200 ற்கும் மேற்பட்ட கழிவறை கட்டிக்குடுக்க முன்வந்தனர் . விஷால் இந்த பொது நல பணியில் ஈடுபடவே இந்த திட்டம் வெற்றி பெற பல இடங்களில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளது என்றும் ராஜபாளையம் நகராட்சி வட்டாரங்கள் தெரியபடுத்தியது, மேலும் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் ஒருங்கிணைத்த ஊர் முக்கியஸ்தர்கள்,

சமுக சேவகர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு விஷால் ஊக்கமளிதுள்ளனர். விஷாலை முன்மாதிரியாக எடுத்து பலரும் இங்கு பண உதவி செய்ய முன்வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE