Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மாயம் காண வாராயோ – களம் படத்தில் கபிலன்வைரமுத்து பாடல்

நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மாயம் காண வாராயோ

களம் படத்தில் கபிலன்வைரமுத்து பாடல்

அருள் மூவிஸ் தயாரித்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடவிருக்கும் படம் களம். தயாரிப்பாளர் சுபீஷ் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் ராஜ் இயக்கியிருக்கிறார். ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் பார்வதி ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். இயக்குநர் ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல ஒரு பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் ஒரு பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் இப்பாடலை கபிலன்வைரமுத்து எழுதியிருக்கிறார். திரையில் பார்க்கும்போது புதிதாய் குடி வருகிறவர்களைப் பார்த்து அந்த ஜமீன் வீடு பாடுவது போலவும் அந்தக் காட்சிகளை மறந்துவிட்டு பாடலை மட்டும் கேட்டால் ஒரு பெண்ணுடைய காதல் ஏக்கம் போலவும் ஒரே பாட்டில் இரண்டு பொருள் வரும்படி கபிலன்வைரமுத்து எழுதியிருக்கிறார். ஏப்ரல் 29ஆம் தேதி களம் வெளியாகிறது. மாயம் காண வாராயோ பாடலின் வரிகள்:

பல்லவி

மாயம் காண வாராயோ – உன் கண்கள் பொம்மையோ?

நிலா சாய்ந்த ஒரு நினைவு சுவராய்
என் மேனி ஆனதோ?

அறைகள் ஒவ்வொன்றாய் நான் திறந்திட
வெளிச்சம் வவ்வாலாய் சுருங்கிட

உள்ளே வருகவே
உன்னைத் தருகவே

சரணம்

ஜன்னல் மூடி மெளனம் கூட்டி
மெழுகைக் கொளுத்திடு மகிழ்ந்திடுவேன்

பிரயாணங்கள் அவை முடியும் முன்னே
பிறவி சாந்தியை பரிசளிப்பேன்

மன கூடத்தின் ஊடே கொலுவாய் நுழைந்தாயே
உனைக் கொண்டாடி ஓய்வேனே

அன்பாய்த் தொடும்
அந்நாள் வரும்

Kabilan-Vairamuthu

Back To Top
CLOSE
CLOSE