Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்றான தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள்.பிஆர்ஓ யூனியன் நடந்த தேர்தலில் பதவிகளுக்குப் போட்டியிட்டு வென்றவர்கள் ..

சென்னை:

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்றான தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் யூனியனுக்கு நடந்த தேர்தலில் ஆறாவது முறையாக தலைவரானார் டைமண்ட் பாபு. பொதுச் செயலாளராக முதல் முறையாக வென்று பதவியில் அமர்ந்துள்ளார் ஏ ஜான். தமிழ் சினிமாவில் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தாலும், முக முக்கியமான அமைப்பு பிஆர்ஓ யூனியன். ஒரு படத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் பிஆர்ஓக்களைக் கொண்ட அமைப்பு இது. 64 உறுப்பினர்கள் கொண்ட இந்த யூனியனில் 59 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் இது. பொதுவாக சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும். முக்கிய பதவிகளுக்கு தேர்தல் இல்லாமல் போட்டியின்றி தங்களுக்குள் ஒருவரைத் தேர்வு செய்துவந்தனர். ஆனால் இந்த முறை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட 16 பொறுப்புகளுக்கும் தேர்தல் நடந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முழுமையான தேர்தல் என்பதால் போட்டியும் பரபரப்பும் பலமாகவே இருந்தது. கடந்த நான்காண்டுகளாக விஜயமுரளி தலைவராகவும், பெரு துளசி பழனிவேல் செயலாளராகவும், மௌனம் ரவி பொருளாளராகவும் பதவி வகித்தனர்.

இந்த முறை தேர்தலில் போட்டியிட்டவர்கள் தலைவர்

(1) – ஆதம்பாக்கம் ராமதாஸ், டைமண்ட் பாபு, நெல்லை சுந்தரராஜன் துணைத் தலைவர்கள் (2) – வீகே சுந்தர், பிடி செல்வகுமார், கோவிந்தராஜ், கணேஷ் குமார் செயலாளர் (1) – ஏ ஜான், பெரு துளசி பழனிவேல் பொருளாளர் (1) – சுரேஷ் சந்திரா, விஜயமுரளி இணைச் செயலாளர்கள் (2) – யுவராஜ், ராமானுஜம், வெங்கட், நிகில் முருகன் இவர்களைத் தவிர 9 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 13 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 57 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இருவர் மட்டும் வாக்களிக்க வரவில்லை. 2.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவில் டைமண்ட் பாபு 39 வாக்குகளுடன் தலைவராக வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற நெல்லை சுந்தரராஜன், ஆதம்பாக்கம் ராமதாஸ் ஆகியோர் தலா 9 வாக்குகள் மட்டுமே பெற்றனர். பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஏ ஜான் 37 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரு துளசி பழனிவேல் 20 வாக்குகள் பெற்றார். பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஜயமுரளி 35 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் சந்திரா 22 வாக்குகள் பெற்றார்.

மற்ற பதவிகளுக்குப் போட்டியிட்டு வென்றவர்கள்:

துணைத் தலைவர்கள்: வீகே சுந்தர் (31), பிடி செல்வகுமார் (32) இணைச் செயலாளர்கள்: நிகில் முருகன் (33), யுவராஜ் (32)

செயற்குழு உறுப்பினர்கள்:

அந்தணன் ஆறுமுகம் பாலன் கிளாமர் சத்யா மேஜர்தாசன் சக்திவேல் சரவணன் வெட்டுவானம் சிவகுமார் ரேகா ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.

Back To Top
CLOSE
CLOSE