பேட்லர்ஸ் சினிமா தயாராயிருக்கும்
நான்கடவுள் ராஜேந்திரன் நடிக்கும்
“யானை மேல் குதிரை சவாரி”
ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யாமலே முடியாதுன்னு முடிவு பன்றதுதான் உலகத்துலையே நம்பர் ஒன் முட்டாள்தனம்ங்கிறத மனசுல வச்சிக்கிட்டு ஒரு டீம் தங்களால முடியாத காரியத்தை முடிக்க முயற்சி பன்றாங்க. இத காமேடி, சென்ட்டிமென்ட் கலந்து பண்ணிருக்கோம். நான் கடவுள் ராஜேந்திரன் செம்ம ஜாலியான கேரக்டர்ல நடிச்சிருக்கார்.
அர்ச்சனாசிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன் கிருஷ்ணமூர்த்தி, மிப்பு, தாரிகா நடிச்சிருக்காங்க. பிண்ணனி இசை தாஜ்நூர், ஒளிப்பதிவு மோகன், எடிட்டிங் கணேஷ்குமார், நடனம் பாபிஆண்டனி. இணை தயாரிப்பு : ரேகா கணேஷ், ஆர்.எஸ். பிரேமலதா. எழுத்து, பாடல்கள், தயாரிப்பு இயக்கம் – கருப்பையா முருகன்.
அரக்கோணம் அருகே நடந்த ;யானைமேல் குதிரைசவாரி’ படத்தின் படப்பிடிப்பில் நான்கடவுள் ராஜேந்திரன், லொள்ளுசபா சாமிநாதன், நாயகி அர்ச்சனாசிங் நடித்துக்கொண்டிருந்தபோது, நிறைய பொதுமக்கள் கூடி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், இளைஞர்கள் ராஜேந்திரனை பார்த்து ‘தலைவா’ ‘சிங்கம் சகாயம்’ என்று கத்தி அதகளபடுத்தியதோடு விடாமல் ‘உங்க சிக்ஸ்பேக்க காமிங்க’ என்று வேண்டுகோள் வைக்க, ராஜேந்திரனும் சட்டையை கழட்டி சிக்ஸ்பேக்கை காட்டி மிரட்டினார். இதைக்கண்டு ரசிகர்கள் மிரண்டுபோனார்.
‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தின் டைட்டிலில் ‘யானை மேல் குதிரை சவாரி, போயி பாரு தெரியும் உன் சேதி’ என்று தொடங்கும் பாடலின் இடையே ‘ஈழத்தமிழனை காக்கப்போறிங்களா?’ என்ற ஒரு வரி வருகிறது. இதில் ‘ஈழம்’ என்ற வார்த்தையை எடுத்தே ஆகவேண்டும் என்று சென்சார் போர்டு அதிகாரி சொல்ல, பாடலாசிரியரும், இயக்கனருமான கருப்பையா முருகன் எவ்வளவோ போராடியும் அந்த வார்த்தையை பாடலில் வைக்க அனுமதி தர மறுத்து விட்டார்கள். வேறு வழியின்றி, வேதனையோடு அந்த வார்த்தையை கட்செய்தார் இயக்குனர்.