Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நனையாத மழையே

கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நனையாத மழையே” என்று Nanaiyadha mazha (21)பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 49 – O என்ற படத்தில் நடித்திருக்கிறார். மற்றும் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து, கோவை சிவா, மாஸ்டர் கபிலேஷ்கணபதி, செல்வி சக்தி ஷிவானி ஆகியோருடன் கானாபாலா முக்கிய வேடமேற்கிறார்.
ஒளிப்பதிவு – கிச்சாஸ்.. இவர் அரண்மனைக்கிளி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
இசை – சௌந்தர்யன்
பாடல்கள் – நா.முத்துகுமார், அறிவுமதி, சீர்காழி சிற்பி
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – ஸ்பீட் மோகன்
எடிட்டிங் – V.ஜெய்சங்கர்
தயாரிப்பு மேற்பார்வை – சிவா
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் மகேந்திரகணபதி.
படம் பற்றி இயக்குனர் மகேந்திரகணபதி கேட்டோம்…
இது ஒரு காதல் கதை தான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று சொல்வார்கள். அதாவது ஒரு குடும்பம் விருத்தி அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான்.அதே நேரத்தில் ஒரே ஒரு பொய் ஒரு கல்யாணத்தையே நிறுத்தி விடும் என்பது நிஜம்தானே.
எல்லா மழை துளியுமே பூமியை தொட்டவுடன் அந்த ஒரு துளி கூட ஏதோ ஒரு இலக்கை நோக்கி போகும்.
இந்த நனையாத மழையே – மழைத்துளி எந்த இலக்கை நோக்கி போகிறது ? என்பது கதை !
ஆறு அருமையான பாடல்கள் சௌந்தர்யனின் இசையில் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார் இயக்குனர் மகேந்திரகணபதி.

Back To Top
CLOSE
CLOSE