Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி..

இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு மாவட்டத்தில் இயற்கை வேளாண் அங்காடியை நடிகர் ஆரி திறந்து வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிர்விக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி விவசாயி ரங்கநாதன் என்பவர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட முன்வந்தார். அவருடன் சேர்ந்து அந்த நிலத்தில் சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்ட பயிர்களை நட்டோம். தற்போது அந்தப் பயிர்கள் மூலம் விவசாயி ரங்கநாதனுக்கு 25 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது.
மேலும், இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தனது நிலத்தின் முன்னாலேயே ஆரி பசுமை அங்காடி எனும் பெயரில் விற்பனைக்கும் வைத்துள்ளார் ரங்கநாதன். அந்த அங்காடியை திறந்து வைத்தேன்.

விவசாயி ரங்கநாதனுக்கு வேளாண் அதிகாரிகள் மூலமாக லோன் கிடைத்துள்ளது. முதல் தவணையாக ரூ.40 ஆயிரத்தை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளார். நிலத்தில் பயிர்செய்து, அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை ஆய்வு செய்த அவர்கள், ஆரோக்கியமான காய்கறிகள் என்றும் கூறியுள்ளனர். மேலும் அந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை அழைத்து வந்து பயிர்களை பார்வையிட்டுள்ளனர். இயற்கை மாற்று விவசாயம் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயி ரங்கநாதன் விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் இனிமேலாவது விவசாய நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். நீங்களே பயிர்செய்து இனி நேரடியாக நீங்களே விற்பனை செய்ய முடியும். அதற்கு உதாரணம் இதோ விவசாயி ரங்கநாதனே இருக்கிறார். திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய மாற்றம் படிப்படியாக தமிழகம் முழுக்க பரவும்!

இவ்வாறு நடிகர் ஆரி தெரிவித்தார்.

Back To Top
CLOSE
CLOSE