Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ என்னும் பொன் விழா நூலை வெளியிட்டார் ‘இசைஞானி’ இளையராஜா ..

கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ என்னும் பொன் விழா நூலை வெளியிட்டார் ‘இசைஞானி’ இளையராஜா

காடும், காடு சார்ந்த நிலமும் தான் ஐந்திணைகளில் ஒன்றான ‘முல்லைத்’ திணையின் சிறப்பு….. அதுபோல் கலையும், கலை சார்ந்த இலக்கியமும் தான் கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ நூலின் தனித்துவமான சிறப்பு. ‘முல்லைச்சரம்’ கலை-இலக்கிய மாத இதழின் பொன்விழா மலர் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (14.10.16) அன்று சென்னையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கிய இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இசைஞானி இளையராஜா, இலக்கியச் சின்னம் குமரி ஆனந்தன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ந.கிருபாகரன், பெங்களூரு இஸ்ரோ மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் துணைவேந்தர் பொற்கோ ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

உலக கலை இலக்கிய வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘முல்லைச்சரம்’ பொன்விழா மலரை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட, கவிஞர் பொன்னடியார் கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை நீதிபதி ந.கிருபாகரனும், ‘பாரதிதாசன் உலகப் பெருங்கவிஞர்’ நூலை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும், ‘நினைவலைகளில் பாவேந்தர்’ நூலை குமரி ஆனந்தனும் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி , இந்த விழாவில் இந்தியாவின் பசுமை மனிதர் என்று அழைக்கப்படும் அப்துல் கனி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இலக்கியச் சின்னம் குமரி ஆனந்தன் உள்ளிட்ட 21 பேருக்கு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE