Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘சென்னை 28 – II’ ஆம் பாகத்தின் தமிழ் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறது ‘அபிஷேக் பிலிம்ஸ்’

‘சென்னை 28 – II’ ஆம் பாகத்தின் தமிழ் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறது ‘அபிஷேக் பிலிம்ஸ்’

முழுக்க முழுக்க கூட்டு முயற்சியில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். எந்த நேரத்திலும் ‘டென்ஷன்’ ஆகாத ஒரு கேப்டன் மற்றும் வெற்றி கோப்பைக்காக தங்களையே முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் அணியினர்…. இவை இரண்டும் இருந்தால் நிச்சயமாக அந்த அணிக்கு வெற்றி நிச்சயம்….தற்போது அதே பாணியில் உருவாகி இருப்பது தான் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு இயக்கி தயாரித்து இருக்கும் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம். ரசிகர்கள் மட்டுமின்றி வர்த்தக உலகிலும் அமோக எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் தொடர்ந்து பெற்று வரும் இந்த ‘சென்னை 28 – II’ படத்தின் தமிழ்நாடு அளவிலான விநியோக உரிமையை, தற்போது ‘அபிஷேக் பிலிம்ஸ்’ சார்பில் வாங்கி இருக்கிறார் ரமேஷ் கே பிள்ளை.

“என்னுடைய பாலிய கால சிநேகிதத்தை என் மனதில் மீண்டும் விதைத்த திரைப்படம் சென்னை 28. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தோடு நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு விநியோக நிறுவனமாக, எங்கள் படத்தை விளம்பர படுத்துவதில் நாங்கள் மும்மரமாக ஈடுப்பட்டு வருகிறோம். இதுவரை நாம் அனைவரும் ஐ பி எல் ஆட்டத்தை பார்த்து கொண்டாடி மகிழ்ந்தோம்…. ஆனால் தற்போது நம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளையாடக் கூடிய ‘தெருமுனை கிரிக்கெட்’ ஆட்டத்தை கொண்டாட இருக்கிறோம்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘அபிஷேக் பிலிம்ஸ்’ ரமேஷ் கே பிள்ளை.

Back To Top
CLOSE
CLOSE