Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

“மிஷ்கின்” படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக்கூடியதாக இருக்கும்…

“மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும்…” என்கிறார் ‘சவரக்கத்தி’ படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரெலி

இசை கருவிகளுக்கெல்லாம் அரசியாக திகழ்வது ‘வயோலின்’. அந்த வயோலின் இசையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அரோல் கொரெலி. புது சென்னையாக கருதப்படும் மறைமலைநகரில் பிறந்து வளர்ந்து, பட்டய கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்த அரோல் கொரெலி, இசையின் மீது உள்ள காதலால் ‘பிசாசு’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ‘பிசாசு’ படத்தில் நான்கு ஐந்து பாடல்கள் இல்லாவிட்டாலும், அதில் இடம்பெற்ற “நதி போகும் கூழாங்கல் பயணம்….” என்னும் பாடலும், பின்னணி இசையும், ரசிகர்களின் நெஞ்சத்தை கரைத்துவிட்டது என்பதை உறுதியாகவே சொல்லலாம். தன்னுடைய முதல் படத்திலேயே இசை பிரியர்களின் பார்ட்டுக்குரிய இசையமைப்பாளராக உருவெடுத்த அரோல் கொரெலி தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படம் மூலம் தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். ‘லோன் வுல்ப் புரொடக்ஷன்’ சார்பில் மிஷ்கின் கதையெழுதி, தயாரித்து, ஜி ஆர் ஆதித்யா இயக்கி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“மிஷ்கின் சாரின் படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக்கூடியதாக இருக்கும்…அவரின் ரசனையை நன்கு அறிந்து, அதேகேற்றார் போல் இசையமைப்பது தான் சவாலான காரியம். ஆனால் என்னால் மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை உணர முடியும்…

சவரக்கத்தி படத்திற்காக இரண்டு பாடல்களை நான் இசையமைத்து இருக்கிறேன். ஒன்று, “தங்கக்கத்தி, இரும்புக்கத்தி…”, மற்றொன்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் வரிகளில் உதயமான “அன்னாந்து பார்….” பாடல். இதில் இரண்டாவது பாடலுக்கு மிக முக்கியமே, காட்சிகள் தான்… எனவே நாங்கள் அந்த பாடலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிடவில்லை… நிச்சயமாக யதார்த்தமான காட்சிகளில் உருவான இந்த “அன்னாந்து பார்….” பாடலை திரைப்படத்தில் பார்க்கும் பொழுது, ஒரு புதுவித அனுபவம் ரசிகர்களின் உள்ளங்களில் ஏற்படும். எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த மிஷ்கின் சாருக்கு இந்த தருணத்தில் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….இயக்குனர் ராம் சாரோடும், இயக்குனர் ஆதித்யாவோடும் இணைந்து பணியாற்றியது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘சவரக்கத்தி’ படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரெலி.

Back To Top
CLOSE
CLOSE