கடந்த வருடம் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன் திரு விஜய பிரபாகரன் உரியமையாளராக இருந்த சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய பேட்மின்டன் வீராங்கனை P V சிந்து திகழ்ந்தார், அதேபோல் இந்த வருடமும் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியில் P Vசிந்து கலந்து கொள்கிறார் என்று அந்த அணியின் உரிமையாளர் திரு விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில்,
P V சிந்து மீண்டும் எங்கள் அணிக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி. அவர் எங்கள் அணியில் இருப்பது எங்கள் அணிக்கு கூடுதல் பலம்.மேலும் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார் என்பது எங்களுக்கு பெருமை. மேலும் இந்த முறை நிச்சயமாக எங்கள் அணி கோப்பையை வெல்லும் என்று உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
