Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘அறம்’ செய்ய விரும்பும் நயன்தாரா..

‘அறம்’ செய்ய விரும்பும் நயன்தாரா

காசு, பணம், பெயர், புகழ் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு மகிழ்ச்சியும், நிம்மதியும், ‘அறம்’ செய்வதில் தான் இருக்கின்றது….. “அறம் செய்ய விரும்பு….” என்ற ஆத்திச்சூடி வரிகள் மூலமாக தான் மனித வாழ்வு முழுமை அடைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது…. அதனை உறுதி படுத்தும் வகையில் உருவாகி இருப்பது தான், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ திரைப்படம்.

அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி வரும் ‘அறம்’ திரைப்படத்தை ‘கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார் கோட்டப்பாடி ஜே ராஜேஷ். ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும், வேலு ராமமூர்த்தி, ஈ ராம்தாஸ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் வலுவான கதாபாத்திரங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்திருக்கும் இந்த ‘அறம்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் லால்குடி இளையராஜா, படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்களுள் ஒருவரான பீட்டர் ஹெய்ன் என தலைச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.

“உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் ‘அறம்’. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு தான் கதை நகரும்….எனவே தான் நாங்கள் படத்திற்கு ‘அறம்’ என்று தலைப்பிட்டோம். ‘மாவட்ட ஆட்சியர்’ என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா அவர்கள் வழங்கி இருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….எங்கள் அறம் படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறோம்…. அதற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது கிடைத்து வரும் அமோக வரவேற்பை பார்க்கும் பொழுது, மிகவும் பெருமையாக இருக்கின்றது….விரைவில் எங்களின் ‘அறம்’ திரைப்படம் மூலம் சமூதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார்.⁠⁠⁠⁠

Back To Top
CLOSE
CLOSE