Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜல்லிக்கட்டுக்காக மௌன அறவழி போராட்டம் நாளை. தென்னிந்திய நடிகர் சங்கம் !!

வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !!
இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் !

இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிதனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து இன்றுவரை நமது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது.

அதை நடத்த விடாமல் பலவருடங்களாக நீதி மன்றங்கள் மூலம் தடைகளும் , அதை நாம் மீட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதுமாக இருந்து வருகிறோம்.கடந்த மூன்று வருடம் அதுவும் நடக்காமல் தமிழர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். “ பொறுத்தது போதும் “ என்று இன்று தமிழர்கள் பொங்கி அதற்கு நிரந்தர தீர்வுக்காக எழுந்துள்ளனர்.குறிப்பாக மண்ணின் மைந்தர்கள் , மாணவர்கள் ,இளைஞர்கள் இன உணர்வை வெளிபடுத்த தமிழகமெங்கும் களமிறங்க போராடி வருகிறார்கள். 1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகம் கண்டுள்ள மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக மாறி உள்ளது. இந்த ஒற்றுமை எங்களுக்கு பெரும் மகிழ்வை தருகிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற 2௦ஆம் தேதி காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை வளாகத்தில் உணர்வை வெளிபடுத்தும் வகையில் மௌன அறவழி போராட்டத்தை அறிவிக்கிறோம்.
மாணவர்கள் பின்னால் இருந்து மத்திய அரசுக்கும் , சட்டதுறைக்கும் அழுத்தம் தந்து , “ ஜல்லிகட்டுக்கு நிரந்திர தீர்வை “ பெறும் வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறோம் !

Back To Top
CLOSE
CLOSE