வண்ணமயமான ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் மக்களுடன் இணைந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் அவர்கள், தன்னுடைய ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு புகழ் பாடும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளை பறைசாற்றும் வகையிலும், தான் வரைந்த 18 வண்ணமயமான ஓவியங்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமர்பித்துள்ளார்.