திருச்சி பிப்9 வே.அ. கலை வேந்தன்
நடிகர் சூர்யா – அனுஷ்கா ஸ்ருதிஹாசன் நடிப்பில் உலகெங்கும் சி3 திரைப்படம் வெளியிடப்பட்டது –
திருச்சி ரம்பா தியேட்டர், எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தினை ஆன் லைனில் வெளியிடப் போவதாக Tamil Rockers மிரட்டல் விடுத்திருந்தது.
எனவே இதனை தடை செய்யவும் திருட்டு விசிடி யை தடுக்கும் வகையிலும்
நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்பாட்டின் பேரில்
தமிழகமெங்கும் சி3 திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் தலா 4 பேர் கொண்ட குழு தீவிர
கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது
இதில்
திருச்சி ரம்பா தியேட்டரில் சி3 திரைப்படத்தை
செல்போனில் பதிவு செய்த 8 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய
போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
விஷாலின் இந்த அதிரடி கண்காணிப்பு திரைத்துறையினர் நடிகர்கள் இயக்குநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
