பெருமையுறுவது நானல்ல;மொழிதான்
-கவிஞர் வைரமுத்து
இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசு தலைவரால் தேசிய விருதை எழவாது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிததொன்று கருதுகிறேன்.
அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் தேசிய மொழிகளில்.திரைபாடலைப் பொறுத்தவரை தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.
தர்மதுரை படத்தின் இயக்குனர் சீனுராமசாமி,இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஓளிப்பதிவாளர் சுகுமார் நடித்த விஜய்சேதுபதி-தமன்னா,தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்
இந்த பாடல் தற்கொலைக்கு.முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும்
தற்கொலை என்பது தேசத்தின் நோயாக்ப் பெருகிவருகிறது காதல் தோல்வி-மனஅழுத்தம் அச்சம்-வறுமை என்ற காரணங்ளே மனிதர்களைத் தற்கொலைகு தள்ளுகின்றன,எந்த ஒரு தோல்விலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை,தோல்வி என்பது அடுத்த வசலுக்க்கான கதவு என்று உணர்த்தவேண்டும் அதைதான் இந்த பாடலைப் பாடும் நாயகி நினைவுறுத்கிறாள்