Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதைதான் ‘கிரகணம்’ திரைப்படம்

தமிழ்ச் சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவமெடுக்கும். அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த ‘கிரகணம்’ படமும் எல்லாருக்கும் தெரிந்த கதையை. புதிய கோணத்தில் சொல்லும் படம்தான்..!

இதில் நாயகர்களாக கிருஷ்ணா, சந்திரன் இருவரும் நடிக்க நந்தினி என்ற புதுமுக நாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் , பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி. ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன், படத் தொகுப்பு – மணிகுமரன் சங்கரா. தயாரிப்பு – கே.ஆர். பிலிம்ஸ் சார்பில் சரவணன், கார்த்திக், இணை தயாரிப்பு –சிவக்குமார், எழுத்து, இயக்கம் – இளன்.

ஒரு நாள், ஒரு இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குநர்கள் மத்தியில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சொல்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யம்தானே..!?

இப்படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் இளன் கூறுகையில், “சந்திர கிரகணம் நிகழும் ஓர் நாள் இரவில் நம் கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. இந்த இருள் ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களின் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகிறது என்பதை பரப்பரப்பாகவும் திகிலாகவும் சொல்லியிருக்கிறோம்…” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE