Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

மோகன்லாலின் ‘புலி முருகன்’ தமிழில் 3-D தொழில் நுட்பத்தில் வெளியாகிறது

மலையாளத் திரையுலகில் 150 கோடி வசூல் சாதனை செய்த ஒரே திரைப்படம் ‘புலி முருகன்.’

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலின் சினிமா வாழ்க்கையில் கிரீடமான இந்த ‘புலி முருகன்’ திரைப்படம், தற்போது அதே பெயரில் தமிழில் 3-D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது.

மலையாளத்தில் ‘புலி முருகனை’ தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் ‘புலி முருகன்’ படத்தை தமிழிலும் உருவாக்குகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடித்திருக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பாடல்கள் – சினேகன், ஆர்.பி.பாலா, ஒளிப்பதிவு – ஷாஜிகுமார், இசை – கோபி சுந்தர், படத் தொகுப்பு – ஜான், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், கதை, திரைக்கதை – உதயகிருஷ்ணா, இயக்கம் – வைஷாக், தயாரிப்பு – டோமிச்சன் முலக்குப்பாடம். இந்தப் படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஆர்.பி.பாலா.

ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக ‘புலி முருகன்’ படம் உருவாகி இருக்கிறது. ஒரு மிருகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவது என்பது சிரமமான காரியம். ஆனால் புலியை வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளை இந்த படத்திற்கு எடுத்தது மிகப் பெரிய சிரமம். ஏன் என்றால் விலங்குகளுக்கு எப்போது கோபம் வரும் என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது.

அப்படி நிறைய விஷயங்கள் இந்த படத்தில் நடந்தது. இதில் நடித்த நடிகர்கள் வேலை செய்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டனர். அந்த பிரம்மாண்டத்தை பார்த்த மலையாள ரசிகர்கள் ‘புலி முருகனை’ நிரம்பவே கொண்டாடினார்கள்.

இப்போது ‘புலி முருகன்’ படம் தமிழ் ரசிகர்களுக்காக 3-D தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. மலையாள ரசிகர்களுக்காகவும் 3-D தொழில் நுட்பமாக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த மலையாள 3-D படம் சமீபத்தில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. ஒரே காட்சியில் 25000 பேர் பார்த்து அது ‘கின்னஸ்’ சாதனையாக பதிவிடப்பட்டது.

இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது

Back To Top
CLOSE
CLOSE