Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஸ்ரீ விஜயலக்ஷ்மி அம்மா மூவீஸ் தயாரிக்கும் “ காதல் போல் வேறேது ”

“ காதல் போல் வேறேது ”
ஸ்ரீ விஜயலக்ஷ்மி அம்மா மூவீஸ் பட நிறுவனம் சார்பாக ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் “காதல் போல் வேறேது”
இந்த படத்தில் எஸ்.ஆர்.அருண்ராஜ் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கிருஷ்ணபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயகிருஷ்ணன், ஸ்ரீவித்யா, வாசுதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – விமல்முருகன்
இசை – ஸ்ரீகோபிநாத்
பாடல்கள் – பாமரன், மீனாட்சிசுந்தரம், எஸ்.எம்.சாமி, சுரேஷ்நாராயணன்,நவீனா.
எடிட்டிங் – D.வரதராஜன். ஸ்டன்ட் – திகில்முகேஷ்
நடனம் – சரண் பாஸ்கரன். தயாரிப்பு – ஜெயகிருஷ்ணன்
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – V.K.சிதம்பரம்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம் …. ஹீரோ கண்ணன் ஹீரோயின் தமிழை காதலிக்கிறார், தமிழும் காதலிக்கிறார். ஆனால் இவர்கள் காதல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாத காதல் அதை சில கெட்ட நண்பர்கள் திசை திருப்பிவிட்டு. கண்ணனை குடிகாரனாக்கி விடுகிறார்கள். இதை அறிந்த கண்ணனின் நண்பர்கள் அவனது எதிர் காலத்தை கெடுக்கும் காதலையும், கெட்ட சகவாசத்தையும் தடுக்க நண்பர்கள் தமிழிடம் அவள் மனம் நோகும் அளவிற்கு பேசி அவளே அந்த காதலை கைவிடும் அளவிற்கு செய்துவிடுகிறார்கள்.அதனால் மனம் உடைந்த கண்ணன் அனைத்திலும் இருந்து விடுபட்டு வாழ்கையில் நல்ல நிலைமைக்கு வந்து விடுகிறார்.
முடிவில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை ! படப்பிடிப்பு கன்னியாகுமரி, முட்டம், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE