Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜூலை 28முதல் ‘புயலாய் கிளம்பி வர்றோம்’

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி.ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி வர்றோம் ‘.

இந்தப் படத்தில் நாயகனாக தமன், நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கம் புலி, திருமுருகன், அழகன் தமிழ்மணி, ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – விஜய்.வி., இசை-சார்லஸ் தனா, படத் தொகுப்பு – எஸ்.சதிஷ்குமார், வசனம் – கே.நந்தகுமார், கலை இயக்கம் – முத்துவேல், நடனம் – பாலாஜி, தினா, ராதிகா. சண்டை பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஒய்.எஸ்.டி. சேகர்.

படத்திற்கு கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் கேமிரா கவிஞர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும் படங்களை இயக்கிய அனுபவமும் கொண்டவர்.

இத்திரைப்படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி படம் பற்றி பேசிய இயக்குநர் ஜி.ஆறுமுகம், “தயாரிப்பாளருக்கும் இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர்தான். இருந்தாலும், அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு நாளும் அவர் வந்ததில்லை. படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான்தான் தினமும் பணப் பட்டுவாடா செய்தேன் . அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர்.

இது மதுரை மண் சார்ந்த கதை. படித்துவிட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல. அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை.

மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் மதுரை, சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். 31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம். படத்துக்குத் தணிக்கை முடிந்து ‘யு’ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. படம் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது..” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE