Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

தலைசிறந்த நடிகர் கார்த்தி! வித்தியாசமான “தீரன் அதிகாரம் ஒன்று ” வில்லன் நடிகர்! ரோஹித்பதக்

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி வில்லன் ரோஹித் பதக் பேசியது

கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த நபர் ஆவார். நானும் கார்த்தியும் அவரவர் திரை துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம்பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது. தினமும் அந்த காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சண்டை காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என்னோடு இருக்குமாறு கூறி பாதுகாப்பாக அக்காட்சிகளை படம்பிடித்தார் தினேஷ்.

நான் எப்போதும் படபிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னேரே படபிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன். இயக்குநர் வினோத் தான் எப்போதும் படபிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வருபவர். நான் சீக்கிரம் வருவதை பார்த்து. அவருடைய உதவி இயக்குநர்களிடம் கூறி என்னை படபிடிப்பு தளத்துக்கு கடைசியாக அழைத்து வருமாறு கூறினார் வினோத்.
படம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று என்னுடைய கைபேசியை அனைத்து வைத்திருந்தேன். படத்துக்கு என்ன ரிசல்ட் வருமோ. எல்லோரும் படத்தை பற்றி என்ன எழுத போகிறார்களோ என்றோ பயந்துகொண்டு இருந்தேன். ஆனால் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ரோஹித் பதக்.

இங்கே தென்னிந்திய சினிமாவில் எல்லாம் சரியாக உள்ளது என்றும். தயாரிப்பு நிர்வாகம் மிகச்சிறப்பாக உள்ளது என்றும் கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE