Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!

பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை
டி .என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.

சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக் ஷனா,நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதிஹேமலதா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள்.அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்திக் கண்டு வியந்து போனார்கள்.

நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் ….”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது.மதுமிதாவின் தாய்,தந்தையரின் அயராத ஊக்குவிப்பின் செயலை மிகவும் பாராட்டுகிறேன்.நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம்.அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது.இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரும்…நோய்நொடிகள் வரவே வராது.கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்க பரதம் கைகொடுக்கும்” மதுமிதா பரதக் கலையிலும் ,கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.என்றார்.

நிகச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கும்,மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் மற்றும்
பக்கவாத்தியக்காரர்களுக்கும் மதுமிதாவின் பெற்றோர் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

Back To Top
CLOSE
CLOSE