Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“ வஜ்ரம் “ பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது

S.D.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் “ வஜ்ரம் “ பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாககிறது இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். இந்த படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா,ஜெய், பாண்டிரவி, பெல்பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி,சமிரா,அம்சாதேவி, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவு – A.R. குமரேசன் / இசை – F.S.பைசல் / பாடல்கள் – சினேகன்
வசனம் – லோகிதாஸ் / எடிட்டிங் – மாரீஸ் / ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர்
கலை – மகேஷ்.N.M / நடனம் – விஜய், ராஜ்விமல் / நிர்வாக ஆலோசகர் – G.S.செந்தில் ஜெயன் / தயாரிப்பு நிர்வாகம் – சிவசங்கர்
தயாரிப்பு – P.ராமு
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – S.D.ரமேஷ்செல்வன்
படம் பற்றி இயக்குனர் கூறியது…. முழுக்க முழுக்க கல்வியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. கல்விதான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும், ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியம். அடுத்த தலைமுறைகள் சிறப்பாக அமையவேண்டுமானால் அதற்க்கு கல்வி மிகவும் அவசியம். அப்படிப்பட்ட கல்விக்காக போராடும் நான்கு சிறுவர்களின் கதை தான் இது.
மனிதனுக்கும் கல்வி அவசியம் என்ற கொள்கையோடு தான் வாழ் நாளை அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் தன்னை அர்ப்பணித்து, அனாதைகளாய் கிடந்த நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை தத்தெடுத்து அவர்களோடு ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் தம்பிராமையா எதிர்களால் அப்பள்ளி அபகரிக்க படுகிறது.
மாணவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து எப்படி எதிரியிடம் போராடி தம்பிராமையாவையும், பள்ளியையும் மீட்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இந்த நான்கு பையன்களும் மிக இயல்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு அச்சன்கோவில், மூணாறு, சாலக்குடி, அஸ்ஸாம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். படம் வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி உலக முழுவதும் வெள்ளியாக உள்ளது என்றார்.

Back To Top
CLOSE
CLOSE