Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இயக்குநர் பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’


பரத்பாலாவின் “மீண்டும் எழுவோம்”

இந்திய மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இப்படியொரு ஊரடங்கினை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் 9 வாரங்களாக 1.3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே அடங்கியிருந்தனர். ஒட்டுமொத்த தேசமே இதுவரை இப்படியொரு அனுபவத்தை சந்தித்ததில்லை என்று சொல்லலாம். கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியின் அச்சுறுத்தலால் உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட இந்திய ஜனநாயகம் சிறைபிடிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை நாம் வரும் சந்ததியினருக்குச் சொல்ல வேண்டும் என்பதற்க்காக
இயக்குநர் பரத்பாலா ‘மீண்டும் எழுவோம்’ என்ற இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த தேசிய ஊரடங்கை இந்த படம் நினைவுகூர்கிறது. வரும் சந்ததியினர் இப்படி நடந்ததா, நம்பமுடியவில்லையே என்று ஆச்சரியப்படும் நிகழ்வு இது. இதனைக் காட்சிப்படுத்த பரத்பாலாவின் குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதற்காக அனைத்து தொழில்நுட்பங்களுமே உதவியிருக்கிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் இந்தியர்கள் வீட்டில் சிறைபட்டிருந்த போது, இயக்குநர் பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும், இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் சிறை பிடித்துள்ளனர். 14 மாநிலங்களில், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் முறையாக அனுமதிப்பெற்று பயணப்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தை ஆவணப்படுத்தும் விதமாக, இந்த குழுக்கள் படம்பிடித்துள்ளனர்.
காஷ்மீரிலிருந்து கேரளா வரை, குஜராத்திலிருந்து அசாம் வரை, ஹரித்வாரிலிருந்து ஸ்பிடி பள்ளத்தாக்கு வரை, லக்னோவிலிருந்து பெங்களூரு வரை, தாராவியிலிருந்து செங்கோட்டை வரை விரிந்து கிடக்கும் இந்தியாவை காட்சிகளாகக் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது.

இதற்கான தலைமை கட்டுப்பாட்டு அறை மும்பையில் அமைக்கப்பட்டது. அங்கு ஒரு குழு 24 மணி நேரமும், தேசம் முழுவதிலுமிருந்த குழுக்களுடன் ஒருங்கிணைந்து உழைத்தனர். களத்தில் இருந்த குழுக்கள் பரத்பாலாவுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தார்கள். வீடியோ கால் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வரும் அறிவுறுத்தல்களை வைத்தே தேவைப்படும் காட்சிகளை, கோணங்களை கச்சிதமாகப் படம்பிடித்தனர். இயக்குநரால் தூரத்திலிருந்தே செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் உயிர் பெற தொழில்நுட்பம் துணை நின்றது. நாம் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்த்தியது.

14 மாநிலங்களில் படப்பிடிப்பு சோனி மற்றும் டிஜிஐல் படம்பிடிக்கப்பட்டன.

Back To Top
CLOSE
CLOSE