இந்தியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், புதிதாக இரண்டு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கிறது. இம்முறை ஆர்.வி.பிலிம்ஸுடன் இணைந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், ‘பிறை தேடிய நாட்கள்’ மற்றும் ‘எங்கிட்ட மோதாதே’ என்ற இரண்டு புதிய தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறது. 2013-ம் ஆண்டு இறுதியில் வெளியாகி பெரும் பாராட்டினைப் பெற்ற ‘விடியும் முன்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி அதில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஆபிரஹாம் பிரபு, ‘பிறை தேடிய […]