ஸ்ரீசாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக D.மனோகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான ‘கில்லி’, ‘பம்பரம்’, ‘கோலி’ ஆகியவற்றின் பெருமையை பறைசாற்றும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த விளையாட்டுகள் எல்லாம் நம்மூர் கிராமங்களுக்கு உரியதாக இருந்தாலும் படம் எடுக்கப்பட்டிருப்பது என்னவோ முற்றிலும் மலேஷியாவில். அதுதான் இன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. வாழ்க்கைக்கு உதவாது என்று பெரியோர்களால் ஒதுக்கப்பட்ட நல்ல விஷயங்கள் […]