Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘கில்லி, பம்பரம், கோலி’ விளையாட்டுக்களைப் பற்றிப் பேசும் திரைப்படம்

ஸ்ரீசாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக D.மனோகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’.

நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான ‘கில்லி’, ‘பம்பரம்’, ‘கோலி’ ஆகியவற்றின் பெருமையை பறைசாற்றும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த விளையாட்டுகள் எல்லாம் நம்மூர் கிராமங்களுக்கு உரியதாக இருந்தாலும் படம் எடுக்கப்பட்டிருப்பது என்னவோ முற்றிலும் மலேஷியாவில். அதுதான் இன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

வாழ்க்கைக்கு உதவாது என்று பெரியோர்களால் ஒதுக்கப்பட்ட நல்ல விஷயங்கள் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.

புதுமுகங்களான தமிழ், பிரசாத், நரேஷ் என்று ஒன்றுக்கு மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும் தீப்தி ஷெட்டி என்ற அழகிய புதுமுகம் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் பெயருக்குக் கூட காதல் என்பது கிடையாது.

அந்த அளவுக்கு நட்பையும் வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டத்தையும் மட்டுமே மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகும் சந்தோஷ்குமாரின் கவர்ச்சியான தோற்றம் இப்போதே ஏகப்பட்ட ரசிகைகளை அவருக்கு உருவாக்கிவிட்டது.

அதேபோன்று இப்படத்தில் நாயகியான தீப்தி ஷெட்டியும் இப்படத்தில் ஒப்பந்தம் ஆன கையுடன் தெலுங்கு, கன்னடம் என்று மற்ற மொழி படங்களிலும் நடித்து முடித்து இப்போது மூன்று படங்களுமே ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது.

படம் முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருந்தாலும் இதுவரையில் நடித்திராத வித்தியாசமான வேடங்களில் கஞ்சா கருப்பும், தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளது இப்படத்தின் சிறப்பு அம்சம்.

அத்துடன் படம் பார்க்க வருபவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே புதுமுகங்களின் படம் என்பதை மறந்து படத்துடன் ஒன்றிவிடுவார்கள் என்றும் அந்த அளவுக்கு தமிழ், பிரசாத், நரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் சந்தோஷப்படும் இயக்குநர் இந்த ஆண்டின் சிறந்த புதுமுகத்துக்கான விருது தன் அறிமுகத்துக்கு கிடைக்கும் என்று இப்போதே பெருமைப்படுகிறார்.

அதேபோல பிரசாத்தின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் விருதுக்கான தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ஏதோ ஒரு வகையில் தன் படத்துக்கு விருது நிச்சயம் என்று அடித்துக் கூறுகிறார்.

மேலும் நாககிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், P.சாய்சுரேஷின் படத் தொகுப்பும், தினாவின் நடன அமைப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு துணை சேர்த்துள்ளதாக கூறும் இயக்குநர், தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் நிச்சயம் அதை உறுதி செய்வார்கள் என்றும் போஸ்ட் புரொடக்‌ஷனின்போதே இந்தப் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் சந்தோஷப்படுகிறார்.

Back To Top
CLOSE
CLOSE