தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின் ‘க்யூப்’ பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் பேசிய விஷால், “க்யூப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். புதிதாக வந்திருக்கும் ஒருவர் 22,500 ரூபாய்க்கு பதிலாக 5000 ரூபாய்க்கு தருகிறேன் என கூறியுள்ளார்” என்று பேசியிருந்தார். இதனிடையே தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு என தனியாக வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உள்ளது. அதில் இப்பிரச்சினை எப்போது […]