Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: February 2016

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் “டிங் டாங்”

ஜாய் ஸ்டார் enterprises நிறுவனத்தினர் வெளி வர இருக்கும் ஆகம், முடிவடையும் தருவாயில் உள்ள கரம் ஆகிய படங்களை தொடர்ந்து தங்களது மூன்றாவது படத் தயாரிப்பான ‘டிங் டாங்’ என்ற தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராக உள்ள புதிய படத்தின் பூஜையை சென்னையில் நடத்தினர். ‘ டிங் டாங் ‘ ஒரு முற்றிலும் புதுமையான , உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்து உள்ள த்ரில்லர் கதை. ஜினிஷ் என்ற புதிய இயக்குனரை இந்தப் படத்தில் […]

நேமிசந்த் ஜபக் – சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்

நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாா். இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் சற்குணமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் […]

அதர்வனம் படப்பிடிப்பில் பரபரப்பு.. பத்து மணி நேரம் தண்ணீரில் மிதந்த ஹரிப்ரியா திடீரென்று மூழ்கினார்!!

தென்னிந்திய திரையுலகில் முதல் டிஜிட்டல் வெற்றிப் படமான ‘சிலந்தி’ படத்தை இயக்கி டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட இயக்குனர் ஆதிராஜன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்து எழுதி இயக்கி வரும், ஸ்டைலிஷான த்ரில்லர் படம் “அதர்வணம்” கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், ஆகியோரின் மைத்துனரும், 38 படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவரும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவருமான விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 28 […]

பி.வாசு இயக்கத்தில் நாகார்ஜுன், விஷ்ணு – மம்தா மோகன்தாஸ் – நடிக்கும் ‘ரவுடி மாப்ளே’

பல மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம், மீடியாவின் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இன்னைந்து தயாரிக்கும் படத்திற்கு “ ரவுடி மாப்ளே “ என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் கிருஷ்ணா – அர்ஜுனா என்ற பெயரில் வெளியான இப்படமே ரவுடி மாப்ளே என்று மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாகார்ஜுன் – விஷ்ணு இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். மற்றும் நாசர், நெப்போலியன், மனோரமா, பிரம்மானந்தம் புவனேஸ்வரி நடிக்கிறார்கள். மரகதமணி இசையமைக்கிறார். வசனம், பாடல்கள் […]

வரும் 19 ம் தேதி திரைக்கு வர உள்ள “நவரச திலகம்”

பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார். ஒளிப்பதிவு […]

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தலைமை உரையாற்றிய பத்மஸ்ரீ கமல்ஹாசன்!!

கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது. காதல் இருக்கும் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையே இருக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். என்னவெல்லாம் சொல்ல நினைக்கிறீர்களோ அது அத்தனையையும், மன்னிப்புக் கேட்பதற்கான அவசியம் ஏற்படுவதற்குள் சொல்லி முடிக்க உங்களால் இயல வேண்டும், அதுதான் கருத்துச் சுதந்திரம். அதுவும்கூட நீங்கள் உங்கள் உள்ளத்திலிருந்து சொல்வதாக இருக்க வேண்டும்- மன்னிப்பு கேட்பதைச் சொல்கிறேன். “கருத்துச் சுதந்திரம்” என்ற தலைப்பை நான்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னை இங்கு அழைத்தவர்களுக்கும் அதில் நம்பிக்கை […]

Back To Top
CLOSE
CLOSE