Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

உப்பு கருவாடு படத்தின் டீசறை வெளியிட்டார் ஜோதிகா

unnamed (1)36 வயதினிலே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆஃபிசையும் மீண்டும் ஆட்கொண்ட ஜோதிகா இயக்குனர் ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டார்.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் என்ற ரீதியில் படம் எடுப்பவர் என்ற வகையில்இயக்குனர் ராதா மோகனுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே என்றுமே மிக நல்ல பெயர் உண்டு. தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளி வர தயாராக் உள்ள அவரது அடுத்த படமான உப்பு கருவாடு திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் முன்னிலையில் அவரது ‘மொழி’ நாயகி ஜோதிகா வெளியிட்டார். ஜோதிகாவின் எளிமை உப்புகருவாடு படக் குழுவினரை வியப்பில் ஆழ்த்தியது.
டீசரை பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்த ஜோதிகா , இப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் “ குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை எடுத்திருப்பதற்கு இயக்குனர் ராதா மோகன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ‘மொழி’ போல் உப்பு கருவாடு திரைப்படமும் ராதா மோகனுக்கு முக்கியமான திரைப்படமாக அமையும். இப்படத்தில் நந்திதா நடித்திருப்பது போலான கதாப்பாத்திரம் எந்த ஒருக் காலக் கட்டத்திலும் எல்லா கதா நாயகிகளுக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் நந்தித கொடுத்து வைத்தவர்தான் ‘ என ‘உப்பு கருவாடு படத்தை பற்றியும் , இயக்குனர் ராதா மோகன் பற்றியும் நாயகி நந்திதா பற்றியும் மனமார புகழ்ந்துப் பாராட்டினார் ஜோதிகா.

“ அபியும் நானும், மொழி படங்களில் இருந்த முதன்மை பெண் கதாப்பாத்திரங்களை யாரும் மறக்கமாட்டார்கள் அத்தகைய கதாப்பாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்களுடன் பணி புரியக் கிடைக்கும் வாய்ப்பை தவற விடுவதில்லைஎன்ற எண்ணத்தின் பிண்ணனியில் தான் இப்படத்தில் நடித்திருகிறேன். ஜோதிகா அவர்களை பார்க்கும்வரை மிகவும் பரபரப்பாய் இருந்தது எனினும் அவர் எங்களை வரவேற்ற விதமும், பேசிய விதமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரே எங்களது படத்தின் டீசரை வெளியிட்டது கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளது. டீசரை பார்த்து மிகவும் ரசித்தார் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார். என்னைப் பற்றியும், எனது படங்களை பற்றியும் குறிப்பாக ‘உப்பு கருவாடு’ படத்தை பற்றியும் அவர் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது .” என இமயத்தின் உச்சியை தொட்டு விட்ட உற்சாகத்துடன் கூறினார் படத்தின் நாயகி நந்திதா.

Back To Top
CLOSE
CLOSE