Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

மீரா ஜாக்கிரதை’ தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

மீரா ஜாக்கிரதை’ தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யசக்தி பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுக்க நிலவி வருகின்றன. அது பற்றி கேள்விகளும் ஆராய்ச்சிகளும் உலகெங்கும் தொடர்கின்றன.

ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர்குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை இதயத்தின் லப்படப் ஓசை எகிறும் அளவுக்குச் சொல்கிற படம்தான் ‘மீராஜாக்கிரதை’

இப்படத்தை ஆர்.ஜி.கேசவன் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ள இவர், சினிமா ஆர்வத்தால் உந்தப்பட்டு யாரிடமும் பணிபுரியாமலேயே இயக்குநர் ஆகியுள்ளார். இப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.அந்தோனி எட்வர்டு தயாரித்துள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி- மரக்காணம் சாலையில் ஓர் இடத்தில் மாய உருவம் ஒன்று தோன்றுகிறது பலரும் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து மர்மமான சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன என்று இதைப்பற்றி ஏராளமான பத்

திரிகைச் செய்திகள் வந்துள்ளன. தொலைக் காட்சிகளிலும் வந்துள்ளன.

இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் கதாசிரியர் மகேஷ்வரன். இவர் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவியாளராகப் பணி புரிந்தவர்.

மீரா என்கிற பேயே எல்லாரையும் மிரட்டுகிறது. அந்த மீராவாக ‘அழகி’ மோனிகா நடித்துள்ளார். ‘சிலந்தி’ என்கிற படத்தின் மூலம் ஹாரர் வெற்றிப்பட ராசியும் இவருக்குண்டு.

தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார். அவரது அனாயாச நடிப்பு அனைவரையும் கவரும்.

பாண்டிச்சேரி, நாமக்கல், கிழக்கு கடற்கரை சாலை, ஓ எம்.ஆர் சாலை, கேளம்பாக்கம், திருக்கோவிலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

காதல், பழிவாங்கல் ,நகைச்சுவை எல்லாம் கலந்த திகில் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்துக்கு ஒளிப்பதிவு வீரமணி. இவர் ரத்னவேலுவின் மாணவர்.

இசை, ராஜ், படத்தொகுப்பு – சஜித் குமரன். “முழுக்க இரவில் நடக்கும் கதை என்பதால் பரபரப்புக்கு பஞ்ச மிருக்காது.கிராபிக்ஸ் கலக்கலும் உண்டு. ” என்று உத்திரவாதம் தருகிறார். இயக்குநர்.

இப்படம் இம்மாத மே 27 ஆம் தேதி ஜெனிசிஸ் ஸ்டுடியோஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

Back To Top
CLOSE
CLOSE