Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

மெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு, இயக்குனர் கீரா & நடிகர் விஷ்ணு பிரியன் விளக்கம்!

மெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான அவதூறான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘மெர்லின்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் விஷ்ணுபிரியன், அஸ்வினி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த பேய் படத்தில வரக்கூடிய் ஒரு காட்சியில் சாமியார் வேடத்தில் வருபவர் பெண்களுக்கு மட்டும் தான் அதிக அளவில் பேய் பிடிக்கும். அதற்கு காரணம் செக்ஸ் தான் என்று கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சியும், வசனமும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு மனு அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பெண்களுக்கு எதிரான இந்த காட்சியை அகற்ற சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை பெரவல்லூரை சேர்ந்த பிரவீணா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த்து. மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சிலம்புச்செல்வன், இந்த படத்தில் உள்ள காட்சிகள் பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக சென்சார் போர்ட்க்கு அளித்த கோரிக்கை மனு இதுவரை பரிசீலிக்க வில்லை. எனவே பெண்களுக்கு எதிரான வசனங்கள் வரும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி தவறான கருத்துகள் இடம் பெற்று இருக்குமேயானால் அதனை நீக்கலாம் எனவும் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்சார் போர்ட், பட தயாரிப்பு நிறுவனம் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

Back To Top
CLOSE
CLOSE