குரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்
நட்சத்திரம் – கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோஹினி, மிருகசிரிடம் 1,2ம் பாதம்
2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்
இதுவரை 5ம் இடத்தில் இருந்து மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்களையும், அனுபவங்களையும் தந்துக்கொண்டிருந்த குரு பகவான் தற்போது 6ம் இடமாகிய துலாம் ராசிக்கு சென்று மன தளர்ச்சியை ஏற்படுத்தும் காலம் இது. அதனால் நீங்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய நேரம். செய்யும் ஒவ்வொரு வேலையிலும் முழு மனதை செலுத்தி சிரத்தையோடு செய்து வர பழகுங்கள். சிரத்தை இருந்தால் சிரமங்கள் குறையும்.
உங்களால் முடிந்த அளவிற்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகரமாக இருங்கள். பண விஷயங்களில் ஒழுங்கு முறையை கடைபிடியுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் ஜாமின் போட வேண்டாம். கிரெடிட் கார்ட் கடன்களை குறையுங்கள். தொழிலில் அகல கால் வைக்காதீர்கள்.
உத்தியோகம் வேலைகளை சுறுசுறுப்பாக முடிக்க பாருங்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்லவும்.
மொத்தத்தில் சிக்கல்களில் மாட்டாமல் இந்த ஒரு வருட காலத்தை ஒழுங்கு முறையோடு கடந்து செல்ல வேண்டும்.
ஸ்ரீரங்கம் சென்று வழிபடலாம். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள் 6,3
அதிர்ஷ்ட நிறங்கள் வெண்மை, மஞ்சள்
பலன்கள் சதவிதம் – 35%
– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.